வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல தடை!

 
ff

வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்றுடன் நிறைவடைகிறது.

ttn

கோவை அருகே உள்ள பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.  சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இங்கு பொதுமக்கள்  சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இருப்பினும் சீதோஷ்ண நிலை மாறுவதால் வழக்கமாக ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது

tn

இந்நிலையில்  வெள்ளியங்கிரி சுயம்புலிங்கம் கோயிலுக்கு மலையேற்றம் செல்ல வனத்துறையினர் அளித்த அனுமதி இன்றுடன் நிறைவடைகிறது.  கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மலையேறி தரிசனம் செய்துள்ளனர். மழை காரணமாக பாதைகள் சேதம் அடைந்துள்ளதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.