சபரிமலை சீசனை ஒட்டி வந்தே பாரத் சிறப்பு சேவை!

 
tn

சபரிமலை சீசனை ஒட்டி வந்தே பாரத் சிறப்பு சேவை  இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tn

 கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி வந்தே பாரத் ரயில் சேவை  திருநெல்வேலி- சென்னை இடையேயான தொடங்கப்பட்டது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும் வகையிலும், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது.  இந்நிலையில் சென்னை - திருநெல்வேலி இடையே நவ.16ம் தேதி முதல் டிச.28ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும், வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

tn

எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15க்கு நெல்லை சென்றடையும். நெல்லையில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15க்கு எழும்பூர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.