முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு பெரிய அடி - வானதி சீனிவாசன்!

 
1 1

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

இன்று கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக , அவர்களது உடல் நலமுடன் நலன் சார்ந்து விழிப்புணர்வு பயிற்சியும் அவர்களுக்கான ஊட்டச்சத்து வழங்குகின்ற தாய்மை என்கின்ற ஒரு புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறோம் என்றார்.தமிழகத்தை பொறுத்தவரை ஒருபுறம் திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி , சமத்துவம், பெண்ணுரிமை என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கான மத்திய அரசு திட்டங்களுக்கு கூட சரியான நிதி உதவியை பயன்படுத்தாமல் இருப்பது,பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் என பெண்ணுரிமை பேசும் திராவிடம் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

திராவிட மாடல் ஆட்சி என்பது முழுவதுமாக பெண்களுக்கு எதிரான மாடலாக இருக்கிறது எனவும், குடும்பத்தில் கூட ஆண் வாரிசுகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் பெண்களுக்கு கொடுக்காதது தான் திராவிட மாடல் அரசாக பார்க்கிறோம் என தெரிவித்தார். ஒவ்வொரு துறையிலும் திட்டங்களை அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பு அதனை செயல்படுத்துகின்ற போது முற்றிலும் அதற்கு மாறாக நடந்து கொள்வது,தேர்தல் வாக்குறுதியில் ஒன்று கொடுப்பது, ஆனால் தேர்தல் நெருங்கும் போது வேறு ஒன்று பேசுவது, இடையில் தேர்தல் வாக்குறுதிகளுக்காக போராடக் கூடிய நபர்களைக் கூட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குவது என மக்களுக்கு எதிரான அரசாக திராவிட மாடல் அரசு அரசு இருக்கிறது எனவும் விமர்சித்தார்.

தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில், பெண்களுக்கு விடுபட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கப் போகிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி சொல்லி இருப்பதாகவும் இத்தனை ஆண்டுகளாக கொடுக்காமல் தேர்தல் வருகின்ற பொழுது கொடுக்கின்றனர் எனவும் ,மக்களை ஏமாற்றுகின்ற டிராமா வேலையை செய்து கொண்டிருக்கின்றனர்.உச்ச நீதிமன்றம் கரூர் வழக்கினை சிபிஐ விசாரணைக்கு வழங்கி உத்தரவிட்டதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் நாங்களும் இதை எங்களின் கோரிக்கையாக வைத்திருந்தோம் .

கரூரில் நடந்ததை விபத்து என ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி பேசும்பொழுது நடந்ததாக கூறப்படும் பல்வேறு விஷயங்கள் மிகப்பெரிய சந்தேகத்தை மாநில அரசின் மீது உருவாக்கி இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.அரசாங்கத்தின் சார்பில் ஏற்படுத்தியிருக்கிற ஒரு நபர் கமிஷன் மீது நம்பிக்கை இல்லை என்பதை எங்கள் மாநில தலைவர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் சிறப்பு விசாரணை குழுவை எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கின்றார்கள்.

இது தமிழக காவல்துறை முழுவதுமாக தோல்வி அடைந்திருக்கிறது என்பதை காட்டுகிறது எனவும், தமிழக காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த தீர்ப்பு ஒரு அடியை கொடுத்து இருக்கிறது. தமிழக காவல்துறையின் மீதான நம்பிக்கை என்பது தமிழக மக்களுக்கு சிறிது சிறிதாக குறைந்து கொண்டிருப்பதாகவும் அவர்களுடைய முழு திறன் முழு சுதந்திரம் பறிக்கப்பட்டு உள்ளது.