கொடைக்கானல் அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- தந்தை, மகன் பலி

 
கொடைக்கானல்

கொடைக்கானல் வடகவுஞ்சியில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.

கொடைக்கானல் - பழனி சாலையில் 200 அடி பள்ளத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. விவசாய பணிக்காக சரக்கு வாகனத்தில் சென்ற கொடைக்கானலை சேர்ந்த கமலக்கண்ணன், ராபர்ட் நிகழ்விடத்தில்யே உயிரிழந்தனர். மற்றொருமகன் யோவான் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று கடந்த மே மாதம் கொடைக்கானல் மலைச்சாலையில் 100 அடி பள்ளத்தில் டெம்போ வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மலைச் சாலையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 21 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.