“திருமா கருத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம்”- வைகோ கிண்டல்
விசிக தலைவர் திருமாவின் பேச்சிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலடித்துள்ளார்.

த.வெ.க. அமைச்சரவையில் வி.சி.க. இடம்பெற்றாலும் தி.மு.க.வுடனான நட்பு தொடரும் என்று கூறிய திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் நிலவி வந்த ஊழல் என்ற கொடிய நோயைத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் முழுமையாக நீக்கியுள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றும், தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டால் விஜய் 180-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி அதனை நிரூபித்துக் காட்டுவார் என்பதே மக்கள் மற்றும் களத்தின் உண்மையான நிலவரமாக உள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய வைகோ, ஆளுநர் ஆட்சியை கொண்டுவர திமுக முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

