மருத்துவமனையில் வைகோ - சீமான் வேதனை!!

 
seeman

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியில்  உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வைகோவிற்கு  சென்னையில்   அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.  வைகோ விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுவாழ்வை தொடர  அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . 

vaiko

இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மதிமுகவின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்கள் தவறி விழுந்ததில் காயமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். 


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அண்ணன் விரைவில் முழு உடல்நலம் பெற்று, அரசியல் பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.