18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு முன்பதிவு – முக்கிய தகவல் இதோ!

 

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு முன்பதிவு – முக்கிய தகவல் இதோ!

மதுரையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முன்பதிவு நாளை மறுநாள் முதல் தொடங்குவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இணை நோய் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிக்கு தட்டப்பாடு நிலவுவதால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முதியவர்களுக்கும் இணை நோய் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு முன்பதிவு – முக்கிய தகவல் இதோ!

இந்நிலையில் மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பப்படும் 18 வயதுக்கு மேற்பட்டோர் நாளை மறுநாள் முதல் முன்பதிவு செய்யலாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையில் கடந்த இரண்டு வாரங்களாக 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் இருந்த நிலையில் தற்போது மாநகராட்சி நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் 24ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.