கலைஞர் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி!
Jul 10, 2024, 09:29 IST1720583975552

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, கலைஞர் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர்' டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இடம்பெற உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் ஒன்றிய அரசின் கெஜட்டில் வெளியாக உள்ளது. இதற்கான மாதிரி வடிவத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்றபெயருடன், ‘தமிழ் வெல்லும்’ எனும் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது.