பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு!!

 
school

 பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று மின்சாரவாரியம் உத்தரவிட்டுள்ளது.

eb

தமிழகத்தில்  10, 11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு  நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. அதன்படி  12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது.  அதேபோல் 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் நிலையில்,  10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  10-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே   10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 25ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு தொடங்கி 2 ஆம் தேதி முடிவடைந்தது.

school

இந்நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,   பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது. பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும்; பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.