“உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற இனிப்பான செய்தியை முதல்வர் அறிவித்துள்ளார்”- உதயநிதி

 
a a

வரலாற்றில் இல்லாத வகையில், குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரித்து வரும் #திராவிட_மாடல்_அரசு, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து சாதனைப் படைக்க எந்நாளும் பக்கபலமாய் இருக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டு மகளிரின் பொருளாதார விடுதலையை உறுதி செய்து வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்க விழா மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற போது பங்கேற்றோம். 1 கோடியே 13 லட்சத்துக்கும் அதிகமான மகளிருக்கு கடந்த 27 மாதங்களாக மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 16.94 லட்சம் மகளிரும் இன்றிலிருந்து பயனடைய உள்ளார்கள். இதன் மூலம், இத்திட்டத்தில் பயனடையும் மகளிரின் எண்ணிக்கை மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 என உயர்கிறது. 


தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்துக்கு மேலும் வலுசேர்க்க, உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற இனிப்பான செய்தியையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்நிகழ்வில், #திராவிட_மாடல் அரசின் திட்டங்களால் பயனடையும் பெண்களின் நெகிழ்ச்சி உரைகளால் உணர்ச்சி வெள்ளத்தில் நிறைந்தது சென்னை நேரு விளையாட்டரங்கம். வரலாற்றில் இல்லாத வகையில், குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரித்து வரும் #திராவிட_மாடல்_அரசு, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து சாதனைப் படைக்க எந்நாளும் பக்கபலமாய் இருக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.