கேப்டன் விஜயகாந்த் நம் மனங்களில் என்றும் வாழ்வார் - துணை முதலமைச்சர் உதயநிதி புகழாரம்
கேப்டன் விஜயகாந்தின் நினைவு தினத்தை ஒட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
தேமுதிக நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு 28ம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதேபோல் தலைவர்கள் பலரும் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் நினைவு தினத்தை ஒட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூய உள்ளத்துக்குச் சொந்தக்காரர், மக்களை நேசித்த பண்பாளர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறோம். நம் மனங்களில் என்றும் அவர் வாழ்வார் என குறிப்பிட்டுள்ளார்.