உதகை மலை ரயில் சேவை துவங்கியது!!

 
train train

மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. 

train

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7:10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது.  அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதியம் 2 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இதனால் உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.   இந்த மலை ரயில் பயணம் மூலம் நீலகிரி மலையின் இயற்கை எழிலை  சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். இந்த சூழலில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் -உதகை மயில் மலை ரயில் சேவை 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டது. கல்லார் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவால், சீரமைப்பு   பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.
 

train

இந்நிலையில் மண் சரிவால் கடந்த 2 நாட்களாக தடைப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.  குறைந்த சுற்றுலா பயணிகளே இருந்த நிலையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.