மாரியம்மன் திருவிழாவில் பட்டாசு மூட்டை வெடித்து சிறுவன் உட்பட இருவர் பலி

 
tn

மாரியம்மன் கோவில் திருவிழாவில் பட்டாசு மூட்டை வெடித்ததில் சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்துள்ள சி.பள்ளி பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு தினங்களாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு நேற்றிரவு டாட்டா ஏசி மினி வேனில்  சாமி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது.  அப்போது சாமி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வந்தன.  பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்துகள் அதிக அளவில் சாமி கொண்டு சென்ற வேனில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.  எதிர்பாராத விதமாக ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு மின்கம்பத்தில்பட்டு மீண்டும் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டையின் மீது விழுந்தது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின.

Death

இந்த விபத்தில் சாலையோரம் நின்றிருந்த ஆகாஷ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் வாகனத்தில் இருந்த ஓட்டுனர் ராகவேந்திரன், ஆதி ஆகியோர்  படுகாயம் அடைந்தனர்.  இருவரும் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஓட்டுநர் ராகவேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . கோயில் திருவிழாவில் பட்டாசு வெடிப்பால் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.