“நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி“- விஜய்

என்னுடைய அன்பான அழைப்பை ஏற்று இஸ்லாமிய மக்கள் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக தவெக தலைவர் விஜய் கூறினார்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்தார் நோன்பு திறக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் 3 ஆயிரம் பேருடன் அமர்ந்து நோன்பு கஞ்சி பருகி நோன்பு திறந்தார் விஜய். தவெக தலைவர் விஜய் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்குப் பின் தவெக சார்பில் மட்டன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து, அனைவரும் உணவருந்தினார்.
நோன்பு திறந்த பின் நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கம்! மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பின்பற்றி மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் பின்பற்றுகிற இங்கு உள்ள அனைத்து இஸ்லாமிய சொந்தங்களும் எனது அழைப்பை ஏற்று வந்து கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.... உங்க எல்லோருக்கும் நன்றி” என்றார்.