“பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன்”- விஜய் கடிதம்

 
விஜய்

பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் என த.வெ.க தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

Image

இதுதொடர்பாக விஜய் எழுதியுள்ள கடிதத்தில், “அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கெண்டு, ஒவ்வொரு நாகும் தமிழத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும்ம் சமூக அவலங்கள் சட்டம் வழங்கு சர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கன்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன். 

யாரிடம் உங்கள் பாதுகப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும் அரணாகவும், எனவே எதைப் பற்றியும் கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவாம், அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.