#BREAKING தலைமை தேர்தல் அதிகாரிக்கு விஜய் பரபரப்பு கடிதம்
Apr 22, 2026, 19:33 IST1776866631925
தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “தேர்தல் நாளில் பிரதான சாலைகள் உள்ளிட்ட வழித்தடங்களிலும் காவல் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பெண் வாக்காளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பெண் காவலர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஒருங்கிணைப்பு பிரிவுகளிலும் பறக்கும் படைகளைச் செயல்படுத்த வேண்டும். சிசிடிவி கண்காணிப்பு, ட்ரோன் வரிசைப்படுத்தல் மற்றும் வீடியோ ஆவணப்படுத்தும் குழுக்கள் மூலம் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். வயதான வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்குப் போதுமான குடிநீர், இருக்கை, நிழல் வசதிகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

