“நான் செய்துவிட்டேன்”- முதல்வர் விஜய்
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முக்கியமான மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. மக்கள் தொகை சுய கணக்கெடுப்புக்காக இணைய வழியில் நான் பதிவு செய்துவிட்டேன் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 17, 2026
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே,… pic.twitter.com/fvA6pX24Jq
தனது சுய விவரங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு இணைய வழியில் பதிவு செய்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்த முதலமைச்சா் விஜய், “அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்! நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள். இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்! உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

