“திருப்பரங்குன்றம் பிரச்சனையில் இரு கட்சிகளும் ஆதாயம் தேட முயற்சி”- அருண்ராஜ்

 
அருண்ராஜ் அருண்ராஜ்

தேர்தல் கூட்டணி குறித்து தனி குழு அமைத்து தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

நாங்க நாய் கிடையாது, பகுத்தறிவு உள்ள தொண்டர்கள்" - அண்ணாமலைக்கு த.வெ.க  அருண்ராஜ் பதிலடி

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் திருப்பூர் மேற்கு மாவட்ட பல்லடம் அவிநாசி மற்றும் திருப்பூர் பகுதிகளில் திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகளை கொட்டும் இடங்களை பார்வையிட்டார். முதலிபாளையம் பகுதியில் குப்பை கொட்டும் பாறைக்குழியை பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாக அமல்படுத்தப்படாமல் செயல்பாடு இல்லாத காரைக்குடிகளில் கொட்டப்பட்டு வருகிறது. 28 சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்த போதும் எதுவும் முறையாக இயங்குவதில்லை. குப்பைகளை அகற்ற தனியார் நிறுவனத்திற்கு குப்பைகளை கிலோ 4 ரூபாய் என ஒப்பந்தம் கொடுத்துவிட்டு பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பாறைக்குழியில் கொட்டப்பட்டுவருகிறது. இந்த குப்பையால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் டிடிஎஸ் என்ற உப்பு அளவு ஒரு லட்சம் என்ற அபாய நிலையில் அடைந்திருக்கிறது. சுற்றுவட்டார பகுதிகளில் 80 ஆயிரம் டிடிஎஸ் அளவு இருப்பதால் இது பொதுமக்களுக்கு கடும் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும். 

திமுகவினர் புலி வாலை பிடித்து விட்டனர். ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் பெற்று விட்டனர். ஏற்றுமதி நிறைந்த நகரம் தற்போது சுற்றுச்சூழல் சீர்கெட்ட பகுதியாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிப்பது மக்கள் மீது அவர்கள் எந்த அளவு அக்கறை வைத்திருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. மேலும் எஸ் ஐஆர்மூலம் யாருடைய வாக்கும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது. உரிய முறையில் ஆய்வு செய்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் அவர்களை இணைக்க தமிழக வெற்றி கழகம் முயற்சி செய்யும். மேலும் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க தனிக்குழு அமைத்து விரைவில் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிடுவார். அனைத்து ஜாதி மதத்தினர் வாழும் இடம் தமிழ்நாடு இங்கு திருப்பரங்குன்றம் பிரச்சனையில் இரு கட்சிகளும் ஆதாயம் தேட முயன்று வருகின்றனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு வருகின்றனர். பிரச்சனை இல்லாத இடத்தில் பிரச்சனையை உருவாக்கியது இவர்கள்தான்” என தெரிவித்தார்.