“அமமுகவைச் சேர்ந்தவர்கள் உறுதியாக அமைச்சர்களாக இடம்பெறுவீர்கள்”- டிடிவி தினகரன்
தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழகத்தின் நலன் கருதி நல்ல முடிவு எடுப்போம். இந்த முறை எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் கூட்டணி ஆட்சி அமைக்கின்ற ஒரு சூழ்நிலை தான் உருவாகி இருக்கிறது. நாங்கள் இடம்பெறுகின்ற கூட்டணி தான் உறுதியாக வெற்றி. கூட்டணியில் நாங்கள் அமைச்சர்களாக வருகின்ற வாய்ப்பு இருக்கிறது. லயோலா கருத்துக்கணிப்பை பற்றி நான் குறை சொல்ல விரும்பவில்லை. மற்ற கருத்துக்கணிப்புகளை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை, 2026 மே மாதம் தமிழ்நாட்டு மக்களின் கருத்து கணிப்பு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். இந்த ஆட்சி முடிவுக்கு வருகின்ற ஒரு நேரத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதே நேரத்தில் கிட்டத்தட்ட இந்த பென்ஷன் ஆணையத்திற்கு அறிவித்ததை நிறைவேற்றவே 13000 கோடியும் இன்னும் 11 ஆயிரம் கோடியும் அதற்காக நிதி ஒதுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவ்வளவு நிதியை எப்படி நிதி மேலாண்மை செய்யப் போகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. அதே நேரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் போராடிக் கொண்டுதான் உள்ளார்கள். இதெல்லாம் இந்த ஆட்சியாளர்களின் சரியாக செயல்படவில்லை என்றால் உறுதியாக இது அவர்களுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்பதுதான் இது காட்டுகிறது.
இந்த மாதத்திற்குள்ளாக கூட்டணி குறித்து அறிவிப்பு வந்துவிடும், யாரிடமும் சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். கூட்டணி ஆட்சி தான் அமையும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெறுகின்ற கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறும். தேர்தல் வாக்குறுதி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நிறைவடையும்போது நிறைவேற்றி இருக்கிறார்கள்., அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் இதை இவர்கள் எப்படி நிறைவேற்ற போகிறார்கள்? ஏனென்றால் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதும் மக்களை ஏமாற்றுவதும் தான் இவர்களின் நடவடிக்கையாக உள்ளது. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமமுக கவுரவமான இடங்களைப் பெற்று கூட்டணி ஆட்சியமைப்போம், அமமுகவைச் சேர்ந்தவர்கள் உறுதியாக அமைச்சர்களாக இடம்பெறுவீர்கள்” என்றார்


