லாரி ஓட்டுனரின் கவனக்குறைவால் போக்குவரத்து பாதிப்பு... சறுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்!

இதனை அறியாமல் ஓட்டுநர் தொடர்ந்து லாரியை இயக்கியதால் சிறிது தூரத்திற்கு கழிவுகள் சாலையி்ல் கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதை கண்ட வாகன ஓட்டிகள் லாரி ஓட்டுநருக்கு தெரிய படுத்தினர். உடனே அவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தினார்.
சாலையில் கழிவுகள் கொட்டிய நிலையில் அச்சாலை வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் கழிவுகளால் சறுக்கி நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவலை அறிந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சாலையில் கொட்டிய கழிவுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கழிவுகளால் வாகனங்கள் சறுக்கி விபத்துக்குள்ளாக கூடாது என சாலையில் சிதறி இருந்த கழிவுகளின் மீது தண்ணீரை பீச்சி அடித்து கழிவுகளை அப்புறப்படுத்தினர்.