அண்ணாமலையிடமிருந்து பதக்கம் வாங்க மறுத்த டி.ஆர்.பி. ராஜா மகன் - தமிழிசை கண்டனம்..!!

 
அண்ணாமலையிடமிருந்து பதக்கம் வாங்க மறுத்த டி.ஆர்.பி. ராஜா மகன் - தமிழிசை கண்டனம்..!! அண்ணாமலையிடமிருந்து பதக்கம் வாங்க மறுத்த டி.ஆர்.பி. ராஜா மகன் - தமிழிசை கண்டனம்..!!


அண்ணாமலையிடமிருந்து பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகனின் செயலுக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரகுடிபட்டியில் நடைபெற்று வரும் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுதல் போட்டியில்,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். அப்போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு  பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார்.  

டி.ஆ.ர்பி.ராஜா மகன்

அப்போது, டி.ஆர்.பி.ராஜாவின் மகன்  சூரிய ராஜபாலு,  அண்ணாமலையிடமிருந்து பதக்கங்களை வாங்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அண்ணாமலை கழுத்தில் பதக்கத்தை அணிவிக்கப்போக, அதனை கையில் வாங்கிக்கொண்ட சூரிய ராஜபாலு, புகைப்படத்திற்கு மட்டும் நின்றுகொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. டி.ஆர்.பி.ராஜாவின் மகன் செயலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ஆளுநர், அண்ணாமலை என சிறப்பு விருந்தினராக தகுதிக்கு ஏற்ப தான் கல்வி நிறுவனங்கள் அழைக்கின்றன. அங்கு விருந்தினராக வருபவர்களுக்கு மரியாதை தர வேண்டும். விருது வாங்க வருபவர்களும் மரியாதை செய்ய வேண்டுய கடமை உண்டு. அப்போது தனிப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டுவது சரியானது கிடையாது. திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது. காழ்ப்புணர்ச்சி அரசியலை திமுக கைவிட வேண்டும். டி.ஆர்.பி. ராஜா தனது மகனை அழைத்து பாரபட்சமாக நடந்துகொள்ள கூடாது என அறிவுரை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.