பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

 
bel

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன பொது மேலாளர் சண்முகம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பொது மேலாளராக சண்முகன் என்பவர் பணியாற்றி வருகிறார். சண்முகம் கடந்த சில நாட்களாக மன உலைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் பெல் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து பொது மேலாளரின் அறைக்கு சென்று பார்த்த போது அந்த அறை உள் பக்கமாக பூட்டி இருந்தது. உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த பொது மேலாளரின் அறையை உடைத்து பார்த்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. சண்முகத்தின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.  சண்முகத்தின் உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.