பிளஸ் 2 தேர்வில் திருநங்கை மாணவி சாதனை!!

 
tg

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் படித்த  திருநங்கை மாணவி நிவேதா தேர்ச்சி பெற்றுள்ளார்.  283 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவிக்கு தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சக மாணவிகள் மற்றும் திருநங்கைகள்  வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திருநங்கை மாணவி நிவேதா, நான் தேர்ச்சி பெற்றுள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது. என் வெற்றிக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தான் காரணம்.  நான் நீட் தேர்வு எழுதியுள்ளேன். கிடைத்து விடும் என்று நம்புகிறேன் என்றார். 
rr

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த நிவேதா 2015 ஆம் ஆண்டில் திருநங்கைகளுடன் இணைந்து இருக்கிறார். தமிழ்நாட்டில் நான்கு லட்சத்து  13 ஆயிரம் மாணவிகள்,  3,58,000 மாணவர்கள்,  ஒரு திருநங்கை உட்பட 7,72,000 பேர் 12ஆம் வகுப்பு பொது தேர்வு கொண்டனர்.  அந்த வகையில் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதிய ஒரே திருநங்கையான நிவேதா தற்போது வெற்றி பெற்று மற்ற திருநங்கைகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.  மருத்துவராக வேண்டும் என்ற கனவும் , ஆசையும் நிவேதாக்கு சாதிக்க வேண்டும் என்ற தூண்டுதலை உண்டாக்கி கொடுத்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற நீட் தேர்வையும் நிவேதா எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.