தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

 
govt govt


4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

transfer

 தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஐஏஎஸ் அதிகாரிகள் ரமண சரஸ்வதி, எம் பிரதாப் ,ஸ்ரேயா பி சிங் , சித்ரா விஜயன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சித்ரா விஜயன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகிப்பார். இவர் தமிழ்நாடு ஊரக புத்தாக்க தலைமை செயல் அதிகாரி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட அதிகாரியாக பொறுப்பில் இருந்தவர்.

tn

 ரமண சரஸ்வதி தமிழ்நாடு கண்ணாடி இழை  கேபிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்பு தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணைதளமை செயல் அதிகாரியாக இருந்தவர் .

எம்.பிரதாப் சிறப்பு திட்ட செயலாக்கு துறையின் துணைச்செயலாளர் பொறுப்புடன் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட அதிகாரி பொறுப்பையும் ஏற்று செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் ஸ்ரேயா பி சிங் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் பொறுப்புடன் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்படுகிறது.