சென்னை கோடம்பாக்கம், வடபழனியில் 2 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் - ஏன் தெரியுமா?

 
traffic diversion

மெட்ரோ ரெயில் பணி காரணமாக சென்னை கோடம்பாக்கம் மற்றும் வடபழனி பகுதியில் 2 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக ஆற்காடு சாலையில் சி.எம்.ஆர்.எல்-லில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ பணிகளை செய்ய வசதியாக போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு சோதனை ஓட்டம் நன்கு செயல்பட்டதால் சி.எம்.ஆர்.எல் கோரியபடி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலைசந்திப்பில் இருந்து டாக்டர் அம்பேத்கார் சாலை சந்திப்பு வரை போக்கு வரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் அனைத்தும் நேராக டாக்டர் அம்பேத்கர் சாலைக்கு ஆற்காடு சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை ( லிபர்ட்டி சந்திப்பு). ரங்கராஜபுரம் பிரதான சாலை. ரத்தினம்மாள் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

வடபழனியில் இருந்து ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் ஆற்காடு சாலையில் செல்லலாம். யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலையில், ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து ஸ்டேக்ஷன் வியூ சாலை சந்திப்பு வரை ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை,  2-வது குறுக்கு தெரு மற்றும் 2-வது பிரதான சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.  விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனகள் தி,நகர் செல்ல ஸ்டேக்ஷன் வியூ சாலை மற்றும் பசுல்லா மேம்பாலம் வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம். கார்ப்பரேக்ஷன் காலனி பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் நேராக விஸ்வநாதபுரம் பிரதான சாலையை நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. மாறாக ரங்கராஜபுரம் பிரதான சாலை. விஸ்வநாத புரம் முதல் தெரு மற்றும் விஸ்வநாதபுரம் இரண்டாவது தெரு சென்று அவர்கள் இலக்கை அடையலாம். 

ரத்தினம்மாள் தெருவில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் நேராக விஸ்வநாதபுரம் பிரதான சாலையை நோக்கி செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மாறாக. விஸ்வநாதபுரம் முதல் தெரு மற்றும் விஸ்வநாதபுரம் இரண்டாவது தெரு சென்று அவர்கள் இலக்கை அடையலாம். டாக்டர் அம்பேத்கர் சாலையில் ஒரு வழி பாதை தற்போது ஆற்காடு சாலை சந்திப்பிலிருந்து 2-வது அவென்யூ வரை நடைமுறையில் உள்ளது. மேற்கண்ட சாலையில், ரத்தினம்மாள் தெரு சந்திப்பில் இருந்து ஆற்காடு சாலை சந்திப்பு வரை இருவழிபாதையாக மாற்றம் செய்யபட்டுள்ளது. ரத்தினம்மாள் தெருவில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கார் சாலை கார்பரேசன் காலனி ரோடு மற்றும் பாளையக்காரர் தெரு வழியாக ஆற்காடு சாலைக்கு சென்று அவர்கள் இலக்கை அடையலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.