பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாக பேசி டார்ச்சர் - ராஜினாமா முடிவுடன் வந்த நஸ்ரியா

திருநங்கை காவலர் நஸ்ரியா மீண்டும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ராஜினாமா செய்யப்போவதாகவும் சொன்னதால் பரபரப்பு அதிகமானது.
தமிழ்நாட்டில் இரண்டாவது திருநங்கை காவலர் நஸ்ரியா. இவர் ராமநாதபுரத்தில் பணிபுரிந்து வந்த போது அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு அளித்திருந்தார் . இதை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு கோவைக்கு மாற்றப்பட்டார். கோவை மாநகர காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் காவலர் நஸ்ரியா இன்று தனது ராஜினாமா கடிதத்துடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். அது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது காவல்துறையில் சேர்ந்ததிலிருந்து பல்வேறு அத்திமீறல்களை எதிர்கொண்டு வருகிறேன். தற்பொழுது, தான் பணியாற்றும் பிரிவு ஆய்வாளராக உள்ள மீனாம்பிகை என்பவர் தனது பாலினம் குறித்தும் சாதி குறித்து இழிவாக பேசுகிறார் மனரீதியாக டார்ச்சர் செய்கிறார் என்று கூறினார். என்னால் இனி காவல்துறையில் பணியில் இருக்க முடியாது. இதனால் நான் எனது வேலையை ராஜினாமா செய்ய இருக்கிறேன். அந்த கடிதத்தை கொடுக்க காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
பின்னர் நஸ்ரியாவை அழைத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது நஸ்ரியா சொல்லும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று , ராஜினாமா செய்ய முடிவதில்லை கைவிட்டு புகாரி எழுத்துப்பூர்வமாக கொடுக்கும்படி அவர் அறிவுறுத்தினார். இதன் பின்னர் நஸ்ரியா எழுத்து பூர்வமான புகார் அளித்தார்.
பின்னர் நஸ்ரியா அளித்துள்ள புகார் குறித்து துணை ஆணையர் விசாரிப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது. திருநங்கை காவலர் நஸ்ரியா மீது ஒழுங்கு நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் தற்போது தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய முறையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்.