2வது அரையிறுதி போட்டி : நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதல்!

இன்று நடபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. முதல் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், இதில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், இன்று 2வது அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.