இன்று மார்ச் 1 முதல் எல்லாமே மாறுது.. என்னென்ன தெரியுமா?

 
1

ரயில் டிக்கெட்... அடிக்கடி ரயில்களின் பயணம் செய்யக்கூடியவர்களாக இருந்தால் இதை கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மார்ச் 1ஆம் தேதியிலிருந்து மிக முக்கியமான ஒரு மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. அதாவது இனி யுடிஎஸ் செயலி செயல்படாது. மார்ச் 1ஆம் தேதியிலிருந்து பயணிகள் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை எடுப்பதற்கு யுடிஎஸ் செயலியை பயன்படுத்த முடியாது அதற்கு மாற்றாக ரயில் ஒன் செயலியை மட்டுமே பயன்படுத்த முடியும்.

மத்திய அரசின் புதிய சிம்கார்டு பைண்டிங் விதிமுறையும் மார்ச் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது உங்களுடைய தொலைபேசியில் இருந்து சிம் கார்டை அகற்றி விட்டால் whatsapp போன்ற செயலிகள் வேலை செய்யாது. டிஜிட்டல் சார்ந்த மோசடிகளை தடுக்க இந்த நடைமுறையை அரசு கொண்டுவர இருக்கிறது.

எனவே சிம் பைண்டிங் விதிமுறைகள் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. வாட்ஸ் அப் வெப் சேவைகள் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே லாக் அவுட் ஆகிவிடும் பயனர்கள் மீண்டும் அதனை லாகின் செய்து கொள்ள வேண்டும். போலி எண்கள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

முக்கிய பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் கணக்கிடும் முறையை மாற்றி வருகின்றன. பேலன்ஸ் தொகை இப்போது ஒரு நாளில் அல்லாமல், சராசரி மாதாந்திர இருப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்படும். உங்கள் கணக்கு ஒரு நாளில் குறைவாக இயங்கினால், மீதமுள்ள மாதத்திற்கு போதுமான இருப்புத் தொகையை பராமரிப்பதன் மூலம் அபராதங்களைத் தவிர்க்கலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முன்னெப்போதையும் விட மிகவும் பாதுகாப்பானதாக மாற உள்ளன. அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கூடுதல் பாதுகாப்பு சரிபார்ப்பை செயல்படுத்தியுள்ளன. நீங்கள் பெரிய தொகைகளை மாற்றினால் இப்போது உங்களுக்கு பயோமெட்ரிக்ஸ் அல்லது கூடுதல் அங்கீகாரம் தேவைப்படும்.

2025-26ஆம் ஆண்டிற்கான புதிய வாடகை விதிகளின்படி, மார்ச் 1 முதல் புதிய ஒப்பந்தங்களில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படகின்றன. வாடகை ஒப்பந்தங்களின் டிஜிட்டல் பதிவு இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வைப்புத்தொகை அதிகபட்சம் இரண்டு மாத வாடகைக்கு மட்டுமே இருக்கும். மேலும், வீட்டு உரிமையாளர்கள் 24 மணிநேரத்துக்கு முன் அறிவிப்பு இல்லாமல் வீட்டிற்குள் நுழைவது தடைசெய்யப்படுகிறது.