இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. தங்கம் விலை மேலும் அதிகரிப்பு..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

கடந்த 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று,  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ 272 அதிகரித்து  ஒரு சவரன்  39,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  
 
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக  தங்கம் விலையில் மாற்றம் இருந்துகொண்டே இருக்கிறது. ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளதால், பங்குச்சந்தைகளில் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் பாதுகாப்பான புகலிடம் என்பதை உணர்ந்து தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர்.   இதனால் தங்கம் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.  அவ்வப்போது,  தேவை குறையும் என்பதால் விலை  குறைவதும், உயர்வதுமாக நீடித்து வருகிறது. ஆனால் தங்கம் விலை உயரும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி  விலை நிலவரம்

 சென்னையில்  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையானது  வாரத்தின் முதல் நாளான கடந்த திங்கள் கிழமை முதலே  தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது.  அன்றைய தினம் சவரனுக்கு  264  ரூபாய் குறைந்தது.   தொடந்து செவ்வாய் கிழமையன்று  சவரனுக்கு 248 ரூபாயும், புதன் கிழமை சவரனுக்கு  ரூ.200 ரூபாயும் குறைந்தது.  தொடர்ந்து நான்காவது நாளாக வியாழன் அன்றும் தங்கம் விலை சவரனுக்கு  200 ரூபாய்க்கும் மேல் குறைந்து அன்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,850 ரூபாய்க்கும், ஒரு சவரன் 38,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

இந்நிலையில் நேற்று  தங்கம் விலை அதிரடியாக  சவரனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ.39,176க்கு விற்பனை செய்யப்பட்டது.   இன்று  சென்னையில்  ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.4,884க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39,224க்கு விற்கப்படுகிறது.  சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.69.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.69,500க்கும் விற்பனையாகிறது.