கொரோனா அச்சத்தில் அரசு ஊழியர்கள் - திமுக அரசுக்கு ஓபிஎஸ் கொடுக்கும் அட்வைஸ்!!

 
ops

மத்திய அரசின் வழிகாட்டு முறைகளை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ops

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மத்திய அரசு பணியாளர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மத்திய அரசில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்க படுவதாகவும் , இந்த விலக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்குமென்றும் வீட்டிலிருந்தே பணிபுரிய அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும்,  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களை பொறுத்தவரையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கட்டுப்பாடுகள் நீங்கும் வரை அலுவலகம் அருகில் இருந்து விலக்கு அளிக்க பட்டிருப்பதாகவும் , துறை செயலாளருக்கு கீழுள்ள பதவிகளை வகிக்கும் மத்திய அரசு ஊழியர்களை பொறுத்த வரையில் மொத்தம் உள்ள பணியாளர்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும்,  மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்றும் , வீடுகளிலிருந்து பணியாற்ற கூடியவர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் , அலுவலக கூட்டங்கள் அனைத்தும் காணொலி காட்சி மூலம் நடைபெற வேண்டுமென்றும் , பார்வையாளர்கள் சந்திப்பை பொருத்தவரையில் அவசியமற்ற சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும்,  பணியிடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் ,இவை அனைத்தும் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

ay 4.2 corona

தமிழ்நாட்டில் கடந்த 8ஆம் தேதி அன்று கொரோனா  நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 978 ஆகவும், அதாவது கிட்டத்தட்ட 8 விழுக்காடு விழுக்காடும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆகவும் இருந்த நிலையில், கடந்த 9ஆம் தேதியன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,895 ஆகும்.  அதாவது 8.7 விழுக்காடாகவும் ,உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படும் நிலைமை தற்போது உருவாகி உள்ளதால் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.   கடந்த ஒரு வார காலமாக அரசு ஊழியர்களின் ஒருவித அச்சத்துடனேயே அலுவலகங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

ops

கொரோனா  மூன்றாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கும்  சூழ்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் , விரிவுபடுத்தினால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் நலம் பாதிக்கப் பாதுகாக்கப்படுவதோடு,  அரசு ஊழியர்கள் தொற்று  பாதிப்பு கணிசமாக தடுக்கப்படும்.  மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை  தமிழ்நாடு அரசும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே தமிழக முதல்வர் அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து , மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.