திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு!
Feb 10, 2024, 17:30 IST1707566442000
![assembly](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/5f09fcdb6279716275019a102944ab0f.gif)
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்திலுள்ள 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு பழைய ஆயக்கட்டுப் பாசனமான தளி வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு 12.02.2024 முதல் 31.05.2024 வரை நீரிழப்பு உட்பட, மொத்தம் 260 மில்லியன் கன அடிக்கு மிகாமல், திருமூர்த்தி அணையிலிருந்து, தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்திலுள்ள 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.