மீனாட்சி சுந்தரத்திற்கு "திருவள்ளுவர் விருது"; குமரி அனந்தனுக்கு "காமராசர் விருது" - அரசு அறிவிப்பு!

 
குமரி ஆனந்தன்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டு புரிபவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்படு. அவ்வகையில், பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவரும், 2009ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவரான திருச்சியைச் சேர்ந்த மு.மீனாட்சி சுந்தரத்திற்கு (78) அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.

குமரி ஆனந்தன்

கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி, திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக பணியாற்றினார். பெங்களுர் இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று  பெங்களுரில் வசிக்கும் அவருக்கு அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்கி கௌரவிக்கிறது. (கீழே உள்ள புகைப்படத்தில் வலது பக்க ஓரத்தில் இருப்பவர் மு.மீனாட்சி சுந்தரம்)

அதேபோன்று, பெருந்தலைவர் காமராசர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விகளை கேட்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவரும், தமிழ் இலக்கியங்களில் புலமையும் பேச்சாற்றலும் மிக்கவராகவும், தமிழ் இலக்கியவாதியாகவும் சிறந்த நூல்களைப் படைத்தவரும் பன்முகத் திறன் கொண்ட சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தன்  (88) அவர்களுக்கு தமிழ்நாடு அரசு, 2021ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை வழங்குகிறது.

குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி- Dinamani

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஒரு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இவ்விருதுகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படவுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.