காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் இந்தியா சுதந்திரம் அடைய பலனளிக்கவில்லை - ஆர்.என்.ரவி பேச்சு!

 
rn ravi

இந்திய தேசிய காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கம் ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான காரணமில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். 
 
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், இந்திய தேசிய ராணுவத்தின் கடற்படை மற்றும் விமானப்படையின் புரட்சியே இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம். கலாச்சார சின்னமாகவும், ஆன்மீக சின்னமாகவும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் விளங்குகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் இந்திய ராணுவ படையில் தான் தமிழர்கள் அதிகளவு நிறைந்திருந்தனர். 

ravi

வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகம் போற்றப்பட வேண்டியவை. சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகத்தையும் போற்ற வேண்டும். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு படையை கட்டமைப்புக்கு பின் பல தலைமுறைகளுக்கு பிறகே இந்திய ராணுவத்தில் பெண்கள் அனுமதிக்கப்படுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கம் ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான காரணமில்லை என இங்கிலாந்து முன்னாள் பிரதமர் அட்லீ பதிவு செய்துள்ளார் என கூறியுள்ளார்.