சென்னையில் மேலும் 1,140 பேருக்கு கொரோனா! இன்றைய பாதிப்பு நிலவரம்

 

சென்னையில் மேலும் 1,140 பேருக்கு கொரோனா! இன்றைய பாதிப்பு நிலவரம்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியே 90லட்சமாக அதிகரித்துள்ளது. 11 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

சென்னையில் மேலும் 1,140 பேருக்கு கொரோனா! இன்றைய பாதிப்பு நிலவரம்

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,389 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,79,191 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 42 நாட்களுக்கு பிறகு கடந்த 4 தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 5000க்கு குறைவாக பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 91,245 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 87,66,038 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,631பேர் ஆண்கள், 1,758 பேர் பெண்கள். 192 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

சென்னையில் மேலும் 1,140 பேருக்கு கொரோனா! இன்றைய பாதிப்பு நிலவரம்

இன்று மட்டும் 57 பேர் உயிரிழந்தனர். 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,529 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,245 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,27,703 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளது.