புத்தாண்டையொட்டி திருப்பதியில் 100 கோடியை தாண்டிய காணிக்கை
Feb 5, 2025, 09:12 IST1738726942904

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் 20.05 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் 106.17 கோடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் 20.05 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் 106.17 கோடி காணிக்கையாக செலுத்தினர். கொரோனா தொற்றுக்கு பிறகு உண்டியல் மூலம் 35வது மாதமாக 100 கோடியைத் தாண்டியது. ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்படி தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாக காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் 2022 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ₹ 100 கோடிக்கு மேல் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.