மதுரையில் புதிய டைடல் பார்க் - தமிழக முதல்வருக்கு நன்றி!!

 
mp

தென் தமிழகத்தில் தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான வித்து என்று சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் முக்கியமானது புதிய தொழில்நுட்ப பூங்கா மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்பது. இதற்காக ஜனவரி 19 ஆம் தேதி தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வரை நானும் எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம்.

ttn

இன்றைய தினம் மதுரையில் நடைபெற்ற “ தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” தெற்கு மண்டல மாநாட்டில் விழா பேருரையாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்கள் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து புதிய டைடல் பார்க் அமைக்கப்படும். மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டமாக 10 ஏக்கரில் பூங்கா அமையும்.

su venkatesan

முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று அறிவித்துள்ளார்.மதுரை மற்றும் தென்மாவட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும் அறிவிப்பு இது. மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு உருவம் கொடுத்துள்ள தமிழக முதல்வருக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த தகவல்தொழில்நுட்ப பூங்கா தென் தமிழகத்தில் தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான வித்து" என்று குறிப்பிட்டுள்ளார்.