யூடியூபர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா, கார்த்தி, ஆனந்த் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்ததாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் சித்ரா என்பவர் புகார் அளித்தார். இதையடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூப் திவ்யா, கார்த்திக் ஆனந்த், சித்ரா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சித்ரா, திவ்யா ஆகிய இருவரும் விருதுநகர் சிறைச்சாலையிலும், கார்த்திக் ஆனந்த் ஆகிய இருவர் மதுரை சிறைச்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திவ்யா, கார்த்தி மற்றும் சித்ரா ஆகிய மூன்று பேர் மீதும் தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர்கள் திவ்யா, கார்த்திக் மற்றும் சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.