போலீஸ் எஸ்.ஐ.க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

 
போலீஸ் எஸ்.ஐ.க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது   போலீஸ் எஸ்.ஐ.க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது  

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலம்பாடியில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட தவெக தெருமுனை கூட்டம் குறித்து விசாரணை செய்த போலீஸ் எஸ். ஐயை மிரட்டிய வழக்கில் தவெக நிர்வாகிகள் 2 பேரை காங்கேயம் போலீசார் கைது செய்தனர்.

Image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலம்பாடி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது குறித்து காங்கேயம் எஸ். ஐ சரவணன் உள்ளிட்ட காவலர்கள் கேட்டுள்ளனர்.அப்போது, அங்கிருந்த தவெக நிர்வாகிகள் எஸ். ஐக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எஸ். ஐ சரவணன் அளித்த புகாரின் பேரில் தவெக நிர்வாகிகளான ஆலம்பாடி கிளை செயலாளர் நடராஜ் (51), செயற்குழு உறுப்பினர் பிரதீப் குமார் ( 30) ஆகிய 2 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், நிர்வாகிகள் இருவரையும் கைது செய்தனர்.