தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா தொடங்கியது!

 
tn

பனிமய மாதா பேராலயம் தூத்துக்குடியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் பேராலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இத்திருத்தலத்தைப் பேராலயமாக உயர்த்தினார்.

தூய பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

இந்நிலையில் புகழ்பெற்ற தூய தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தின் 440 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.  தூய பனிமயமாதா ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர் அடுத்த மாதம்  4-ந் தேதி  பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

தூய பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும்,  இரவு 7 மணிக்கு  தேர் பவனி நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி  திருவிழா நடைபெற்ற நிலையில் இம்முறை வழக்கம் போல் துாய பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.