அரிவாளுடன் ரவுடி உடலை அடக்கம் செய்தது ஏன்? தூத்துக்குடி போலீசார் தீவிர விசாரணை!

 

அரிவாளுடன் ரவுடி உடலை அடக்கம் செய்தது ஏன்? தூத்துக்குடி போலீசார் தீவிர விசாரணை!

கடந்த 2 நாட்களுக்கு முன்னர், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, 2 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுத்துவை கைது செய்ய போலீசார் சென்ற போது, போலீசரிடம் இருந்து தப்பிக்க துரைமுத்து நாட்டு வெடிகுண்டு வீசினார். அந்த வெடிகுண்டு தலைமை காவலர் சுப்பிரமணியத்தின் தலையில் விழுந்து வெடித்ததால், காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, குண்டு வீசிய ரவுடியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரிவாளுடன் ரவுடி உடலை அடக்கம் செய்தது ஏன்? தூத்துக்குடி போலீசார் தீவிர விசாரணை!

அதன் பின்னர், காவலர் சுப்பிரமணியத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குண்டுகள் முழங்க நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே ரவுடி துரைமுத்துவின் உடலை, அவர்களது உறவினர்கள் அரிவாளை வைத்து அடக்கம் செய்தனர். அரிவாளுடன் துரைமுத்து உடல் அடக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி எஸ்.பி, துரைமுத்து உடலை அரிவாளுடன் அடக்கம் செய்தது பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் நாட்டு வெடிகுண்டு எங்கு தயாரிக்கப்பட்டது, பதுக்கி வைக்கப்பட்டது குறித்தும் விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.