தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..

 
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..  

தூத்துக்குடி பசிலிகா அந்தஸ்து பெற்ற உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா கொடி ஏற்றம் விமர்சையாக நடைபெற்றது! 

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயம் ரோம் நகரின் கத்தோலிக்க தலைமை பீடமான வாடிகன்  சிட்டியால் பசிலிகா அந்தஸ்து பெற்றுள்ளது.  இந்த ஆலயத்தில் அமைந்துள்ள மாதா சொருபம் கடந்த 469 ஆண்டுகளுக்கு முன்பு புனிதர் பிரான்சிஸ் சவேரியாரால் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.   இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு  442-ம் ஆண்டுக்கான  திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. காலையில் கொடியேற்றதிற்கு முன்பு மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் அந்தோணி,  பனிமய மாதா பேராலய பங்குதந்தை ஸ்டார்வின் ஆகியோர் தலைமையில்  கூட்டு திருப்பலி    நடைபெற்றது. 

பனிமய மாதா பேராலயம்

இதைத்தொடர்ந்து பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக அருள்தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்குதந்தைகள் பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றினர்.  அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் மரியே வாழ்க முழக்கம் வின்னதிர ஒலித்தது.  மேலும் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் காலை, மாலை  சிறப்பு திருப்பலிகள் நடைபெறுவதோடு  வரும்  ஆக்ஸ்ட் 5-ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர் பவனி வெகு சிறப்பாக நடைபெறும் .‌  இந்த திருவிழாவில்   உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட வெளி நாடு என 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி  ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவிழாவிற்காக உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.  திருவிழாவின் பாதுகாப்புக்காக தூத்துக்குடி நகர் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில்  900 போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.