அரசியல் ஆதாயத்திற்காக செங்கோலை பொய், போலி என்கிறார்கள் - திருவாவடுதிறை ஆதீனம்

 
Aadhinam

அரசியல் ஆதாயங்களுக்காக செங்கோல் நிகழ்வை பொய், போலி என்று கூறுவது வருத்தத்திற்குரியது என திருவாவடுதுறை ஆதீனம் கூறியுள்ளார். 

இது தொடர்பாக திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்டதொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் சொன்னதாக சில அறிக்கைாளை கண்டோம். 1947-ல், ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப்பெற்றது குறித்த வரலாற்றைப் பொய் என்று இந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி கூறியதாகத் தெரியவருகிறது. ஆட்சி மாற்றத்தின்போது, அதனை அடையாளப்படுத்துகிற சடங்கினைச் செய்விக்க அழைக்கப் பெற்றோம் என்பது நம்முடைய ஆதீனத்தின் பதிவுகள் உட்பட, பலவகையான ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜி அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட தம்முடைய ஆதீனகர்த்தர், தக்க செங்கோல் செய்வித்து, முறையான சடங்குகளில், மவுண்டபேட்டன் பிரபுவிடம் அதைக் கொடுத்து வாக்கி, தொடர்ந்து செங்கோலைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களிடம் கொடுக்கச் செய்தார்கள்.

பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோய் என்பது சுய ஆட்சியின் சின்னம் என்பதையும் தெளிவாகத் 'தெரிவித்தார்கள். அரசியலுக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக. இந்தச் சடங்குகளும் நிகழ்வுகளும் பொய் அல்லது போலி என்று கூறுதல், எமது நம்பிக்கைத் தன்மையினமீது ஐயம் எழுப்புதல், ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்தல் ஆகியவை மிகுந்த வருத்தத்திற்குரியவை, தவிர்க்கப்படவேண்டியவை. இது குறித்த விரியான தலைல்களை இன்று மாயை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முழுவதும் தெரிவிக்கின்றோம். இவ்வாறு கூறியுள்ளார்.