“மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்”- முதலமைச்சருக்கு திருமா கடிதம்

 
“மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்”- முதலமைச்சருக்கு திருமா கடிதம்

மநீம தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் எழுதியுள்ள கடிதத்தில், “தொகுதிகள் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், மநீமவை டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட அனுமதித்து கூட்டணி மீதான நன்மதிப்பையும், தங்கள் மீதான பெரு மதிப்பையும் மேலும் உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ‘வெல்வோம் ஒன்றாக’ என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழுக்கம் வெற்றிகரமகா முழுமையுறும். மதவாத வலதுசாரி கும்பலை வீழ்த்தும் போரில் மநீமவும் நம்மை போலவே தேர்தலில் போட்டியிட்டு நம்மோடு களமாட வேண்டும். கமல்ஹாசன் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பதுதான் கூட்டணிக்கு நலம் பயக்கும். வாக்கு வங்கி மட்டுமல்ல... திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை” என்றார்.