"அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது"- பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
Dec 22, 2025, 21:10 IST1766418020525
அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(டிச.24) முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் கூடாது என தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பெற்றோர் நீர் நிலைகளுக்கு பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, ஜனவரி 5 தேதி அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.


