அண்ணா பல்கலை., உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் ரத்தா?

 
anna

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கட்டடவியல் மற்றும் இயந்திரவியல் ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக கல்வி படிப்புகளுக்கான மையத்தின் இயக்குனர் ரோஸிமின் திலகர் 20 ஆம் தேதி உத்தரவிட்டார். 

anna univ

ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை,  நாகர்கோவில்,  தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் கட்டடவியல் மற்றும் இயந்திரவியல் தமிழ் வழி பொறியியல் பாடப் பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், தூத்துக்குடி ராமநாதபுரத்தில் இயந்திரவியல் பிரிவில் ஆங்கில மொழியும் ,அரியலூரில் கட்டடவியல் பிரிவில் ஆங்கில வழியும் ,  பட்டுக்கோட்டை,  திருக்குவளையில்   இயந்திரவியல் , மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகிய பாடங்களின் ஆங்கில வழியும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ponmudi

இந்நிலையில் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு   பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,  தமிழ் வழி பாடப்பிரிவுகளின் ரத்து செய்யும் திட்டம் இல்லை. தமிழ் வழியை  அதிகப்படுத்தும் எண்ணம் மட்டுமே உள்ளது என்றார். அத்துடன் தமிழ் வழியில் பயில யாரும் முன் வரவில்லை.  ஏதேனும் ஒரு மாணவர் தமிழ் வழியில் பயில வந்தால் கூட தமிழ் வழி கல்வி தொடரும் என்றும் உயர்கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.