உலக கோப்பை இறுதிப் போட்டியை சென்னை கடற்கரைகளில் காணலாம்

 
உலகக்கோப்பை

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப் போட்டியை கடற்கரையில் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

indvsaus

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த லீக் போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. முதல் அரையிறுதி போட்டி கடந்த 15ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் 16ம் தேதி கொல்கத்தா ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா  அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை கடற்கரையில் நேரலையில் காண ஏற்பாடு! செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது