காலையில் அரங்கேறிய சோகம் ; பைக், கார் மீது லாரி மோதி 4 பேர் பலி..!

 
1 1

தொப்பூர் அருகே சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 

மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.