உயிரை பறித்த அதிவேகம்... 140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த இளைஞர் தலை துண்டிப்பு..!
சூரத்தைச் சேர்ந்தவர் 18 வயதான பிரின்ஸ் படேல். இந்த இளைஞர் 'PKR Blogger' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.வேகமாக பைக் ஓட்டுவதில் வல்லவரான பிரின்ஸ் படேல், தனது கேடிஎம் டியூக் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டி அதை வீடியோவாகப் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் அண்மையில் சூரத்தில் உள்ள கிரேட் லைனர் மேம்பாலத்தில், பிரின்ஸ் படேல் 140 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இவரது வாகனம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் பிரின்ஸ் படேல் தலை தனியாக துண்டிக்கப்பட்டு உடல் தனியாக விழுந்தது. பைக் வேகமாக வந்ததால் தரையில் விழுந்தபோது பிரின்ஸ் படேல் பலமுறை உருண்டார். அப்போதுதான் இவரது தலை துண்டிக்கப்பட்டு உடல் தனியாக விழுந்து சிதறியது. பைக் ஓட்டியபோது, பிரின்ஸ் படேல் ஹெல்மெட் அணியவில்லை என்று தெரியவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் இந்த புதிய பைக்கை, பிரின்ஸ் படேல் வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. பிரின்ஸ் படேலின் தாய், குடிசைப்பகுதியில் வசித்து வருகிறார். தினந்தோறும் பால் விற்று அதில் வரும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
விபத்து நடந்த CCTV காட்சிகளின்படி, மல்டி-லெவல் மேம்பாலமான 'கிரேட் லைனர் பாலத்தின்' மீது சுமார் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து, பிரின்ஸ் சாலையில் விழுந்தார்.சாலையில் பலமுறை உருண்டு, ஒரு இடத்தில் நின்றபோது, அவரது தலை துண்டிக்கப்பட்டு உடல் வேறு, தலை வேறாக கிடந்தது. மோட்டார்சைக்கிள் தடுப்புச் சுவரில் உரசிக்கொண்டே சில நூறு மீட்டர் தூரம் சென்று நின்றது.
விபத்து குறித்த ஆரம்பக்கட்ட விசாரணையில், பிரின்ஸ் விபத்தின்போது ஹெல்மெட் அணியவில்லை என்று தெரிய வந்துள்ளது.


