மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகன்- சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாப பலி

 
death death

ஆம்பூர் அருகே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாமியார் வீட்டிற்கு வர்ணம் பூச சென்ற மருமகன் மீது மேல்தள சுவர் இடிந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் யோசுபாதம். இவர் வர்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று மேல்மிட்டாளம் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வீட்டிற்கு வர்ணம் பூச  சென்றுள்ளார். அப்போது யோசுபாதம், மாமியர் வீட்டின் நுழைவு வாயில் சுவர் மீது, ஏறி வர்ணம் பூசிக்கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக மேல்தள சுவர்  மீது  இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். அப்போது அவர் மீது மேல்தள சுவர்  விழுந்ததில், யோசுபாதத்தின் கால் துண்டாகியுள்ளது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்கு பின்னர் அவரை சிகிச்சைக்காக  வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.