புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் வீட்டில் சோதனை நிறைவு

புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பாக 30 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. மணல் கொள்ளை, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல்லிலும் அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது. இந்நிலையில் புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக நீளும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மணல் விற்பனையில் முறைகேடு, சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமச்சந்திரனின் அலுவலகங்கள் உட்பட 4 இடங்களில் சோதனை தொடர்கிறது. அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் அலுவலகத்தில் நடந்த சோதனையும் நிறைவடைந்தது.புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள ராமச்சந்திரனின் அலுவலகத்தில் மட்டும் சோதனை தொடர்கிறது.